Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபர் கைது!

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (11:53 IST)
நாடாளுமன்ற வளாகத்தில் கத்தி என்ற ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற வளாகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனுமதி பெறாதவர்கள் யாரும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முடியது
 
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் பாராளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைய முயன்றதாக பாதுகாப்பு படை போலீசார்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், கத்தியுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாகவும், அவர் தீவிரவாதியா? என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
 
கைது செய்யப்பட்ட மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் 'தேரா சச்சா சவுதா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments