Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேடீஸ் பாத்ரூமுக்குள் செல்ல துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்.பி. மகன்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:33 IST)
டெல்லியில் பெண்கள் கழிவறைக்கு செல்ல முயற்சித்த எம்.பி மகனை தடுத்த பாதுகாவலரை அந்த நபர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பகுஜன சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி ராகேஷ் பாண்டே. இவரது மூத்த மகன் எம்.எல்.ஏ வாக உள்ளார். 
 
இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் ஆஷிஷ் பாண்டே சமீபத்தில் தோழியுடன் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது ஆஷிஷ் பாண்டே பெண்களின் கழிவறைக்குள் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு அங்கு இருந்து பெண் பாதுகாவலர் ஆஷிஷ்ஷை தடுத்துள்ளார். 
 
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காட்டி அந்த பெண் பாதுகாவலரை மிரட்டியுள்ளார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகவே போலீஸார் ஆஷிஷ் பாண்டே மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments