Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் தலையை வெட்டி கையில் எடுத்து வந்த மனைவி

Webdunia
வியாழன், 30 மே 2019 (16:49 IST)
அசாம் மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவனை கொன்று தலையை எடுத்து கொண்டு வந்து போலீஸில் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 28ஆம் தேதியன்று அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் கையில் ஒரு ஆணின் வெட்டப்பட்ட தலையை வைத்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது “என் கணவர் என்னை தினமும் அடித்து துன்புறுத்துவார். கோடாரியால் என் உடலில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார். அவரை விட்டு பிரிந்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அப்படி செய்யவில்லை. நான் இன்று அவரை கொல்லவில்லை என்றால் அவர் என்னை கொன்றிருப்பார்” என கூறினார்.

அவரிடமிருந்து தலையை கைப்பற்றிய போலீஸார் அவரை நீதிமன்ற விசாரணைக்காக காவலில் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments