Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (14:04 IST)
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


 

 
கடந்த ஜூலை 10ஆம் தேதி நடிகர் திலீப், பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். நடிகர் திலீப் சார்ப்பில் தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் 4 முறை தொடர்ந்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் 5 முறையாக தாக்கால் செய்த மனு விசாரணைக்கு வந்ததில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை மறுக்கப்பட்டு வந்த ஜாமீன் தற்போது வழங்க காவல்துறையினர் உதவியாய் இருந்துள்ளனர். அதாவது, இந்த வழக்கில் 60 நாட்களுள் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. 
 
ஆனால் 85 நாட்கள் ஆகியும் காவல்துறையினர் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதை வைத்து திலீப் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு திலீப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்