Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்! மும்பை அருகே பரபரப்பு..!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:32 IST)
மும்பை அருகே பழுதடைந்த விமானத்தை லாரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில்  திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டதாகவும் லாரி டிரைவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் லாரி டிரைவர் பாலத்தின் அடியில் எப்படி விமானம் உள்ள லாரியை ஓட்டு செல்லலாம் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்றும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 201.. மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments