Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல ரேட்டுக்கு வந்துச்சு.. வித்துட்டேன்! – அமேசானில் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (18:19 IST)
டெல்லியில் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்யும் நபர் கஸ்டமருக்கு வந்த போனை வெளியே விற்று ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் அமேசானில் சலுகை விலையில் அதிக விலை கொண்ட மொபைல் ஒன்று கிடைக்கவும் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் மொபைல் டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் அவரது ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டதாகவும் விரைவில் உங்கள் பணம் வங்கி கணக்கில் அனுப்பப்படும் என்றும் சொல்லியுள்ளார்.

ஆனால் கஸ்டமருக்கு போன் டெலிவரி ஆகிவிட்டதாக காட்டியதால் அவர் அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் ஆர்டர் கேன்சல் ஆகவில்லை என்றும், அவரது பெயரில் டெலிவரி ஆகியிருப்பதாகவும் உறுதி செய்துள்ளனர். டெலிவரி பாய் மீது சந்தேகம் வரவே அந்த வாடிக்கையாளர் டெலிவரி பாய் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

டெலிவரி பாய் மனோஜை பிடித்து விசாரிக்கையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். வாடிக்கையாளருக்கு டெலிவரிக்கு வந்த போனை வெளியே வேறு ஒருவர் அதிக விலைக்கு கேட்டதால் அதை விற்று விட்டு வாடிக்கையாளரை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments