அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்ட அதிஷி சஸ்பெண்ட்.. டெல்லியில் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (15:10 IST)
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
 
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் இன்று சட்டமன்றம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
முதல்வர் அலுவலகத்திலிருந்து அம்பேத்கரின் படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், "அம்பேத்கர் வாழ்க" என கோஷமிட்டனர். அதற்கு பதிலடியாக பாஜக உறுப்பினர்கள் "மோடி வாழ்க" என்ற கோஷத்தை எழுப்பினர்.
 
இதனை அடுத்து, சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிஷி உள்பட 12 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments