Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸிட் போல் ரிப்போர்ட் – ஸ்டாலினை நாடும் அமித் ஷா !

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (09:21 IST)
எக்ஸிட் போல் ரிப்போர்ட்கள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருந்தாலும் அதன் தலைமை மகிழ்ச்சியாக இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடைசி கட்ட தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனாலும் இது பாஜக தலைமைக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஏனென்றால் உளவுத்துறையின் மூலம் அவர்கள் பெற்ற ரிப்போர்ட் வேறு விதமாக வந்துள்ளது. அதன்படி பாஜகவுக்கு தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காது, தொங்கு பாராளுமன்றமே அமைக்க முடியும் என அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வரும் முன்பே கூட்டணிக் கட்சிகளைத் திரட்டும் முடிவில் இருக்கிறார் அமித்ஷா.

இதையடுத்து எப்படியும் தமிழகத்தில் அதிக இடங்களில் திமுக வெற்றி உறுதி என்பதை உறுதிசெய்துகொண்ட அமித்ஷா ஸ்டாலினிடம் தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒருவேளை பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பாண்மைக் கிடைக்காவிட்டால் தங்களுக்கு வெளியில் இருந்தாவது ஆதரவுக் கொடுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் கேட்டுள்ளதாகவும் அதற்கு ஸ்டாலின் நேர்மறையான பதில் எதுவும் இதுவரை சொல்லவில்லை எனவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments