Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் எதிர்ப்பை மீறி அருணாச்சல பிரதேசம் சென்ற அமித்ஷா..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:22 IST)
அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு அமித்ஷா  சென்றுள்ள தகவல் வெளியானதை அடுத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் சீனாவின் எதிர்ப்பை மீறி அமித்ஷா அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு தீபத் எனக் கூறியசீனா சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளுக்கு சீனா வேறு பெயரை வைத்து சூட்டப்பட்டதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேச விவகாரம் இந்தியா சீன இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா  அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிபிதூ என்ற கிராமத்திற்கு சென்றார். மேலும் அங்கு துடிப்பான கிராமங்கள் திட்டம் என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 
 
அருணாச்சல பிரதேசத்துக்கு அமித்ஷா சென்றதற்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் பிராந்தியம் என்றும் இந்த பகுதியில் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை சீனாவின் இறையாண்மையை மீறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments