Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்லேபாட்டா - அடுத்த டார்க்கெட்டை ஃபிக்ஸ் செய்த ஜெகன்!!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (12:10 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது கிராம சுற்றுப்பயண நிகழ்ச்சியான பல்லேபாட்டாவை விரைவில் துவங்கவுள்ளார். 
 
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு வந்ததிலிருந்து பல அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் எதிர்கட்சியின் கடும் எதிஎப்புக்கு மத்தியில் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களுக்கான மசோதாவை நிரைவேற்றினார்.  
 
இதனை தொடர்ந்து 3 தகைநகர மசோதா ஆந்திரா சட்ட சபையில் உள்ள மேல் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆந்திர மேல் சபையில் ஜெகன் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் 3 தலைநகர மசோதா நிறைவேற்றப்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேல் சபையையே கலைத்துவிட்டார். 
 
ஆட்சிக்கு வந்ததும் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதால் ஜெகன் மோகன் ரெட்டி தனது கிராம சுற்றுப்பயண நிகழ்ச்சியான பல்லேபாட்டாவை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ளார். 
 
தனது அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை மக்களை போய் சேர்ந்துவிட்டதா என தெரிந்துக்கொள்ளவும், இன்னும் மக்கள் தன் அரசிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என தெரிந்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments