Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தி வீட்டுக்குள் நுழைந்த 7 பேர்! – நிர்வாகிகள் புகார்!

National
Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (19:47 IST)
பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்.பி.ஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் அவரது வீட்டிற்குள் 7 பேர் கொண்ட குழு காரில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை திரும்ப பெற்ற மத்திய அரசு, எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு மட்டுமே அளிக்கப்படும் என சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்தது.

தற்போது பிரியங்கா காந்திக்கு மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 26ம் தேதி பாதுகாப்பு படையினரின் காவலை தாண்டி காரில் 7 பேர் பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர்.

அவர்கள் பிரியங்கா காந்தியுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும், பிரியங்கா புன்னகையுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பிரியங்கா காந்திக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என பிரியங்கா காந்தியின் அலுவலக நிர்வாகிகள் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments