Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 3 முறை விலை உயர்ந்தும் அட்சய திருதியை நாளில் ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை!

Siva
சனி, 11 மே 2024 (07:49 IST)
நேற்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நாடு முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் ஏராளமான தங்கம் விற்பனையாகும் என்றும் அன்றைய தினம் காலை 5 மணிக்கு நகைக்கடைகள் திறக்கப்பட்டு விடும் என்றும் கூட்டம் குவிந்து வரும் என்பதும் தெரிந்தது.

நேற்று காலை ஆறு மணிக்கே தங்கம் விலை உயர்ந்த நிலையில் அதன் பின்னர் பத்து மணிக்கு மீண்டும் உயர்ந்தது என்பதும் மதியத்தில் மீண்டும் ஒருமுறை உயர்ந்து மொத்தம் ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த போதிலும் தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதும் நேற்று தங்கம் வாங்கினால் வீட்டில் விசேஷமாக இருக்கும் என்ற ஐதீகம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 14 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையை செய்யப்பட்டுள்ளதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு சவரன் தங்கம் ரூபாய் 54 ஆயிரத்து 160 என்று விற்பனையான போதும் மக்கள் தங்க நகை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments