Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கடனை திரும்ப செலுத்தாத முடியாத நிலை.. கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்த ஆடிட்டர்..

Siva
புதன், 17 ஜூலை 2024 (15:27 IST)
ஆடிட்டர் தனது கள்ளக்காதலிக்கு வங்கியில் இருந்து கடன் வாங்கி தந்ததாகவும் அந்த கடன்களை திரும்ப செலுத்த முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டதால் கள்ளக்காதலி வீட்டுக்கே சென்று தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவருக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில் அவருக்கு ஒரு கள்ளக்காதலியும் இருப்பதாக தெரிகிறது. அவர் அவ்வப்போது கள்ளக்காதலியை சந்தித்து வந்த நிலையில் அவருக்கு வங்கிகளில் இருந்து கடன் வாங்கியும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வாங்கிய கடனை கள்ளக்காதலி ஒழுங்காக திரும்ப செலுத்தாததால் ஷாஜியை வங்கி அதிகாரிகள் நெருக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கள்ளக்காதலின் வீட்டுக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

அந்த வீட்டில் அவரது கள்ளக்காதலில் உள்பட யாரும் இல்லை என்றும் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்காதலிக்கு வங்கி கடன் வாங்கி கொடுத்து அதை திருப்பி செலுத்த முடியாததால் ஆடிட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments