Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே பிளாட்ஃபார்மில் ஆட்டோ ஓட்டிச் சென்ற டிரைவர்.. லட்ச ரூபாய் அன்பளிப்பு

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (20:43 IST)
மும்பையில் ரயில் நிலையத்தில், பிரசவமான பெண்ணை ஏற்றிக்கொண்டு நடைமேடையில் ஆட்டோ ஓட்டிய நபருக்கு ஒரு லட்ச ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை மேற்கு வழித்தடத்தில் உள்ள விரார் ரயில் நிலையத்தில் கர்ப்பிணி மனைவியுடன் ரயிலில் வந்திறங்கிய கணவர், தன் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி காரணமாக, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் ப்ளாட்ஃபார்மில் இருந்து மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் செல்ல வேண்டுமென்று செய்வதறியாத திகைத்தார்.

அப்போது சாகர் கம்லாட் கவார் என்கிற ஆட்டோகாரரிடம் உதவி கேட்டார். உடனே ஆபத்துக்கு பாவமில்லை என நடைமேடை வரை ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார். அந்த பெண்மணிக்கு குழந்தை பிறந்தது.

ஆனால் சாகர், விதிகளை மீறி ஆட்டோ ஓட்டியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் பலரின் ஆதரவிற்கு பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் இவரது செயலை பாராட்டி சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரே 1 லட்சம் ரூபாய் அன்பளிப்பு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments