Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் பொருட்கள் வழங்க தானியங்கி ஏடிஎம்: உபி அரசின் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (18:38 IST)
ரேஷன் கடைகளில் கால் கடுக்க நின்று பொருட்கள் வாங்கும் காலம் முடிந்துவிட்டது என்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதற்காக தானியங்கி ஏடிஎம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தானியங்கி ரேஷன் கடை ஏடிஎம்களில் ரேசன் அட்டைகளை பதிவு செய்தால் உடனே தேவையான பொருள்கள் கிடைக்கும் என்றும் கைரேகை பதிவு செய்தவுடன் ஏடிஎம் மூலம் பொருட்கள் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக வாரணாசி நொய்டா ஆகிய பகுதிகளில் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் அரிசி கோதுமை உள்ளிட்டவைகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 7 நிமிடத்தில் இந்த இயந்திரங்கள் பயனாளர்களுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்கும் என்றும் முறைகேடுகள் நடத்தவும் முடியாது என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த இயந்திரங்களை மாநிலம் முழுவதும் அமைக்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ICINet: அனைத்து தோ்தல் சேவைகளுக்கும் ஒரே செயலி! தோ்தல் ஆணையம் அறிமுகம்

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments