Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய அய்யாக்கண்ணு திடீர் பல்டி

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (05:46 IST)
பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் சமீபத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு அறிவித்திருந்தார். இதனால் நூறுக்கும் மேற்பட்டோர் மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அங்கு வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார்.
 
அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின்போது சந்திப்பில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 'பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்தால் வாரணாசியில் போட்டியில்லை. மேலும் விவசாயிகளைக்கு தேவையான வாக்குறுதியை பாஜக அளித்துள்ளதால் 111 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடமாட்டோம்' என்று கூறியுள்ளார். அய்யாக்கண்ணுவின் இந்த திடீர் பல்டி மற்ற விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments