Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா? ஒரு ஆட்டோக்காரர் சந்தித்த வேதனை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (05:30 IST)
கடந்த 28ஆம் தேதி பெங்களூரில் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஆட்டோவில் பெங்களூரில் உள்ள முக்கிய தெருக்களில் தமிழில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை செய்தார்

இதனை பார்த்த கன்னட வெறியர்கள் சிலர் அந்த ஆட்டோக்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆட்டோவின் சாவியை பிடுங்கி வைத்து கொண்டு 'தமிழில் என்ன பேசுகிறாய்? கன்னடத்தில் பேசு என்று அடாவடி செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஒலிபெருக்கி அறிவிப்புக்கு உரிய அனுமதி இருக்கின்றதா? என்று சோதனை செய்தார். அனுமதிக்கடிதம் சரியாக இருக்கவே, ஆட்டோக்காரரிடம் பிரச்சனை செய்த கன்னடர்களை காவல்துறை அதிகாரி அப்புறப்படுத்தினார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவு செய்யும் பலர், பெங்களூரில் தமிழ் பேசக்கூடாதா? என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments