Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : பாஜக படு தோல்வி

Webdunia
வியாழன், 31 மே 2018 (14:35 IST)
உத்தரப்பிரதேசம் கைரணா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
4 மக்களவை தொகுதி மற்றும் 10 சட்டமன்றபேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே அனைத்து தொகுதிகளிலும், பாஜக அல்லாத மற்ற கட்சியினர் முன்னிலை வகித்து வந்தனர்.
 
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் கைராணா தொகுதியில் பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங் தோல்வி அடைந்தாந். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பிஎஸ்பி, ஆதரவு பெற்ற ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளர் தபசம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார்.
 
இந்துப் பெரும்பான்மை தொகுதியான கைரணாவில் ஒரு இஸ்லாமியர் வெற்றி பெற்றுள்ளதும், உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல், நூர்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரும், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள வேட்பாளரும், கர்நாடகா மாநிலம் ராஜேஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மேகாலயாவில் காங்கிரஸ் வேட்பாளரும், கேரளா மாநிலம் செங்கனூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் பாஜகவிற்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments