Publish Date: Fri, 25 May 2018 (16:24 IST)
Updated Date: Fri, 25 May 2018 (16:29 IST)
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்ப நடைபெற்ற நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வராக கடந்த புதன்கிழமை பதவியேற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி இன்று சட்டமன்றத்தில் தனது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார். இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடியூரப்பா பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் உறுப்பினர்கள் சப்தமாக சிரித்தனர். இதனால் எடியூரப்பா உட்பட அனைத்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சட்டசபையில் இருந்து வெளியேறினர்.