Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்பில் குழந்தைகள் பாலியல் குரூப்: அதிரடி காட்டிய சிபிஐ!

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (16:00 IST)
சர்வதேச அளவில் குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் நடத்திவந்த கொடூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. 
 
இந்த செயலுக்கு பல நாட்டை சேர்ந்தவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் குரூப் ஒன்றை அமைத்து அதன் மூலம் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலை கட்டாயப்படுத்தி செய்யவைத்துள்ளனர். 
 
இந்த வாட்ஸ் ஆப் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, கென்யா, நைஜீயா, மெக்சிகோ, பிரேசில், சீனா, அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்தவர்கள் குழந்தைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 119 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 
 
மேலும், இந்த வாட்ஸ் ஆப் குரூப்பின் அட்மினாக செயல்பட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அதில் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகில் வர்மா, மேலும் டெல்லி, மாகாராஷ்ராவை சேர்ந்த 4 அட்மின்களையும் கைது செய்துள்ளனர். 
 
அவர்களது இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்