Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து மீண்டோருக்கு எப்போது தடுப்பூசி? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
புதன், 19 மே 2021 (17:31 IST)
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவிடமிருந்து ஸ்புட்னிக் தடுப்பூசியும் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக 45 வயதிற்கு அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு அதிகமானோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்து அதிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வது பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மூன்று மாதம் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. அதுபோல முதல் டோஸ் தடுப்பூசி எடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் 3 மாதத்திற்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments