Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக தரப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:09 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை அதிகரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு ரூ.150 என்றும், மாநில அரசுக்கு ரூ.400 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளை ரூ.150 என்று வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தர உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments