Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகள் எவ்வளவு? – மத்திய அரசு அறிக்கை!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (10:52 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை விநியோகிக்கப்பட்ட தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை பெற்று மாநில அரசுகளுக்கு விநியோகித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இதுவரையிலான தடுப்பூசி கொள்முதல் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு இதுவரை 42,15,43,730 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மாநிலங்கள் இதுவரை 40,03,50,489 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தியுள்ளன. இந்நிலையில் தற்போது மாநிலங்கள் வசம் 2,11,93,241 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு கூடுதலாக 71,40,000 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேன் தண்ணி குடிக்கிறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! - கேன் பயன்பாட்டில் இவ்ளோ ரிஸ்க்கா?

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

கடலுக்கு அடியில் அதிநவீன ஆயுத சோதனை.. இந்திய கடற்படை சாதனை..!

முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவபழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments