Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியில் பரவும் கொரோனா; 9 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (09:04 IST)
இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் முதலாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது மிகவும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை காலங்களும் நெருங்கியுள்ளன. இதனால் மக்கள் பொருட்கள் வாங்க, விற்க பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடி வருகின்றனர். இதனால் கொரோனா மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சலபிரதேசம், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவின் சுகாதார அமைச்சர்களோடு காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், மேற்கண்ட 9 மாநிலங்களில் நோய் பரவல் ஆபத்து அதிகமாக உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments