Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலே இஸ்ரோ..வெற்றிகரமாக நிலவு வட்டப்பாதைக்குள் சென்றது சந்திரயான் 2

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:17 IST)
சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டபாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில் ராக்கெட் ,விண்கலத்தை  புவி வட்டபாதையில் கொண்டு நிறுத்தியது. பின்பு சுற்றுவட்டபாதை படிபடியாக அதிகரிக்கப்பட்டு, நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2-வை சேர்க்க திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் படி, சந்திரயானின் திரவ இன்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயக்கப்பட்டது. இதனால் நிலவின் வட்டபாதையில் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.

விண்ணில் பாய்ந்த 28 நாட்களுக்கு பிறகு சந்திரயான் 2 விண்கலம், தற்போது நீள்வட்டபாதையில் நிலவை சுற்றி வருகிறது. இந்த செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி, விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டார் பிரிக்கப்பட்டு, செப்டம்பர் 7 அன்று நிலவில் மெதுவாக இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments