எச்-1பி விசாவால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்? இங்கே வாருங்கள்.. சீனா அறிமுகம் செய்யும் K-விசா..!

Siva
திங்கள், 22 செப்டம்பர் 2025 (07:59 IST)
அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைச் சாதகமாக பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள திறமைமிக்க ஊழியர்களை ஈர்ப்பதற்காக, சீனா K-விசா என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த புதிய விசா, அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படும் ஊழியர்களை இலக்காக கொண்டு இந்த விசா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம், இந்தியர்கள் உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த திறமையான ஊழியர்களை சீனாவுக்கு வரவழைக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
 
சீனாவின் இந்த முயற்சி, திறமையான வெளிநாட்டு ஊழியர்களை தன்பக்கம் ஈர்த்து, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் தனது வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments