Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை வருகிறார் பிரியங்கா காந்தி.. செல்வப்பெருந்தகை அறிவிப்பு.. என்ன காரணம்?

Advertiesment
Tamil Nadu Politics

Siva

, புதன், 27 ஆகஸ்ட் 2025 (11:17 IST)
மக்களவை தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட முறைகேடுகளை எதிர்த்தும், 'வாக்குத் திருட்டை' மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், திருநெல்வேலியில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி ஒரு மாபெரும் விளக்க மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
'இந்திய அரசியலமைப்பைக் காக்கவும், நமது வாக்குரிமையைப் பாதுகாக்கவும்' அனைவரும் இந்த மாநாட்டில் திரள வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். 
 
ஏற்கனவே, ராகுல் காந்தி, இதேபோன்ற ஒரு 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான பேரணியை பீகாரில் நடத்தி வருகிறார். இந்த மாநாடு, காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. 
 
பிரியங்கா காந்தியின் பங்கேற்பு, தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் 50% வரி அமல்.. டிரம்ப் போனை 4 முறை எடுக்க மறுத்த மோடி.. என்ன நடக்கிறது?