Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி..! முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு..!!

Senthil Velan
சனி, 17 ஆகஸ்ட் 2024 (17:40 IST)
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க சதி நடப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
 
நில மோசடி வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர  கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, சித்தராமையா ஆளுநரின் இந்த  நடவடிக்கை சட்டவிரோதமானது, அரசியல்சானத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் எந்த தவறு செய்யவில்லை என்றும் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.,வும் ம.ஜ.த.,வும் சதி செய்கின்றன என்றும் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

ALSO READ: அண்ணன் வராரு வழிவிடு.! GOAT படத்தின் டிரெய்லர் வெளியானது.!!
 
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள அவர், என் மீதும், குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள், பிரச்னைகளை சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மேலிடம்  எனக்கு ஆதரவாக உள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments