Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று ராம்தேவ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக் கருத்தை கூறிவதில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கும் பாபா ராம்தேவ், தற்பொழுது ஒரு சர்ச்சைக் கருத்தைக் கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதை கட்டுப்படுத்த என்னிடம் புதிய ஐடியா இருக்கிறது. அது என்னவென்றால், திருமணமான ஜோடியினர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அவர்கள் தேர்தலில் வாக்களிக்க தடை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். இவரது கருத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது.