Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள கொரோனா அபாயம்: சபரிமலைக்கும், திரையரங்குகளுக்கும் தடா!!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (16:25 IST)
கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில்  சபரிமலைக்கும், திரையரங்குகளுக்கும் தடா போட்டுள்ளது. 
 
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முயன்ற விழுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். திரையரங்குகளில் சினிமா பார்க்க பலமணி நேரங்கள் ஒரெ இடத்தில் அமர்ந்திருக்கும்போது கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31ஆம் தேதி வரை சினிமா தியேட்டர்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் நடந்த மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல, கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்  சபரிமலையில் மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைகளுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால், சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments