Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

Advertiesment
கோவிட்

Siva

, ஞாயிறு, 25 மே 2025 (08:00 IST)
இந்தியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது. இதனால், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள், மற்றும் தடுப்பூசிகள் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரும்பாலான நோயாளிகள் லேசான அறிகுறிகளுடன் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 23 புதிய கோவிட் நோயாளிகளை பதிவு செய்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
 
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை செயலாளர் நிலைமையை ஆய்வு செய்துள்ளார். ஹைதராபாத்தில் ஒரு மருத்துவர் கோவிட் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். ரிஷிகேஷ் ஏம்ஸ் மருத்துவமனையில் மூன்று புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன.
 
தானே நகராட்சி, உத்திரபிரதேசம் நோய்டா, மற்றும் பெங்களூருவிலும் புதிதாக கோவிட் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. 84 வயதுடைய ஒருவரும், 55 வயது பெண்மணியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
உலக சுகாதார அமைப்பு   NB.1.8 மற்றும் LF.7 என்ற புதிய வகை வைரஸ்களை கவனிக்க வேண்டிய வகைகளாக வகைப்படுத்தியுள்ளது.
 
மக்கள் அச்சப்பட தேவையில்லை என அனைத்து மாநில அரசுகளும் உறுதிமொழி அளித்துள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?