Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இல்லனா 500 ரூபாய் ஃபைன்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (16:45 IST)
ரயில் நிலையங்களில் பின்பற்றப்படும் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரயில் நிலையங்களில் பின்பற்றப்படும் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. 
 
இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்வே வளாகத்திலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணையாக நிற்கும்: முதல்வர் ஸ்டாலின்

இனி பயங்கரவாதிகளால் தப்ப முடியாது! - இந்தியா தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. ஆனாலும் ஒரு ஆறுதல்..!

போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments