Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமியத்தால் புற்று நோயை குணப்படுத்த சுகாதாரத்துறை ஆராய்ச்சி

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (10:07 IST)
புற்று நோயை குணப்படுத்த கோமியத்தில் ஆராய்ச்சி நடைபெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பசு மாட்டின் கோமியம் நோய் கிருமிகளை கொல்வதில் முக்கிய பங்கு வகிப்பதாக பல இந்துக்கள் நம்புகின்றனர். மேலும் பாஜக அரசு கோமியம் குறித்த ஆராய்ச்சியில் மூழ்கி வருகிறது.

இந்நிலையில் கோமியத்தால் புற்று நோயை குணமாக்க சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதாக அத்துறையின் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், புற்றுநோய் போன்ற குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கான சிகிச்சை முறைகளில் கோமியம் பயன்படுத்தப்படுகிறது. ஆதலால் இந்த சிகிச்சை முறையை விரிவுபடுத்த ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங், தான் மார்பக புற்று நோயை கோமியத்தை குடித்து குணப்படுத்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments