Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எதற்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”..ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (09:24 IST)
தூத்துக்குடி தொகுதி எம்.பி.கனிமொழி, அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்

அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார், திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது என சமீபத்தில் திமுகவை கடுமையாக சாடினார். இதனால் திமுகவினர் இணையத்தளத்தில் ஜெயகுமாரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி.கனிமொழி ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

திமுக தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடக்கூடிய இயக்கம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முதலில் கையில் எடுத்தது திமுக தான். ஆனால் அதிமுக இந்தி எதிர்ப்பை ஒரு போதும் மனப்பூர்வமாக கையில் எடுக்கவில்லை என கூறினார்.

அதன் பிறகு ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பது போல், ”எந்த ஒரு நாகரீகமற்ற விமர்சனங்கள் எதற்கும் பதில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார். கனிமொழியின் இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments