Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்கள்

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (15:03 IST)
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களில் 137 வேட்பாளர்கள் கிரிமினல்கள் என தெரிய வந்துள்ளது.
மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, குஜராத்தை தனது ஆத்மா என்றும் இந்தியா தான் தனது உயிர் மூச்சு என்றும் நாட்டை முன்னேற்றுவதற்கு என்ன விலை கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறினார்.
 
இந்த நிலையில் ஜனநாயக மறுசீரமைப்பு சங்கத்தினர் எடுத்த கணக்கெடுப்பில் தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில்  137 வேட்பாளர்கள் கிரிமினல்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் கொலை, ஆள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். 
 
இவர்களில் பா.ஜனதா சார்பில் 10 பேரும், காங்கிரஸ் சார்பில் 20 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 8 பேரும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 3 பேரும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments