Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

Advertiesment
சிஆர்பிஎஃப்

Siva

, ஞாயிறு, 4 மே 2025 (10:12 IST)
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை  வீரர் முனீர் அகமது, விதிமுறைகளை மீறியதாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம், பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டபோது, வெளிச்சத்துக்கு வந்தது.

முனீர் அகமது, கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த மேனல் கான் என்பவரை வீடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்ததாக தெரிகிறது. பின்னர், அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்ததும், அவரது விசா காலாவதியாகியும் திருப்பி அனுப்பாமல் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதன் விளைவாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள 41வது படைப்பிரிவில் பணியாற்றிய முனீர் அகமது, நேரடியாக எந்தவித விசாரணையும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக, சிஆர்பிஎஃப் தகவல் அலுவலர் மற்றும் டிஐஜி எம்.தினகரன் கூறினார்.

படை விதிகளை மீறியதுடன், தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் நடந்துள்ளார் என்பதால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!