Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் நாளை பந்த்? எதற்காக தெரியுமா?

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (18:17 IST)
நாளை நாடு முழுவதும் சில அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தலித் வன்கொடுமை சட்டம் தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு, கடந்த 2 ஆம் தேதி தலித் அமைப்புகள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர். 
 
இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்து பத்துக்கும் அதிகமான உயிர்கள் பலியாகின. இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் தங்கள் இனத்தவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பொது சொத்துகள் சேதம் அடையாமல் பாதுகாக்கும் படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments