Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் எகிறிய பலி எண்ணிக்கை.. இந்தியாவில் 3வது அலை தலைத் தூக்குகிறதா?

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:01 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,348 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,46,157ஆக உயர்ந்தது. புதிதாக 805 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,191 ஆக  உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,198 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,27,632ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,61,334 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே என்றும் இல்லாத வகையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை ஒரே நாளில் 805 ஆக உயர்ந்திருப்பது 3வது அலையின் அச்சத்தை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! முன்னாள் டீன் அதிரடி சஸ்பெண்ட்..!!

மரண தண்டனை மசோதாவுக்கு ஒப்புதல் தராவிட்டால்.. ஆளுனருக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

ரிலையன்ஸ்- டிஸ்னி இணைப்புக்கு அனுமதி.. அடுத்தது என்ன?

ஓசூர் டாட்டா மின்னணு நிறுவனத்தில் உத்தர்காண்ட் பெண்களுக்கு வேலை: பாமக கண்டனம்..!

கேரள திரையுலகை உலுக்கும் பாலியல் புகார்.! யார் அந்த நடிகர்கள்.? முதல்வருக்கு முக்கிய கோரிக்கை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments