Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் காற்று மாசு குறைந்தது: பள்ளிகள் திறப்பு!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (13:59 IST)
டெல்லியில் காற்று மாசு குறையத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின.

டெல்லியில் கடந்த வாரத்தில் அதிகரித்த காற்று மாசுப்பாட்டால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மக்கள் பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

நாளாக நாளாக காற்று மாசு அதிகரித்து வந்ததால் டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாகன கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டு டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது.

காற்று மாசு குறைந்துள்ளதால் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட தொடங்கினர். எனினும் இன்னும் பல மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டே தங்கள் அன்றாட வேலைகளை செய்து வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments