Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் விதிகளை மீறினாராம்: டெல்லி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ததால் பரபரப்பு

Siva
செவ்வாய், 14 ஜனவரி 2025 (15:44 IST)
டெல்லி முதல்வர் அதிஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
ஜனவரி 7 ஆம் தேதி, அரசு வாகனத்தை தேர்தல் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக தேர்தல் நடத்தும் அதிகாரி டெல்லி முதல்வர் அதிஷிக்கு எதிராக புகார் அளித்தார்.
 
இந்த புகாரை அடுத்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
 
இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அரசியல் நோக்கங்களுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதி இருந்தும், அதை மீறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments