Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க டெல்லி முதல்வர் பரிந்துரை: பரபரப்பு தகவல்..!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (14:00 IST)
டெல்லி தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க துணைநிலை ஆளுநருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் செயலாளர் ஆக இருக்கும் நரேஷ் குமார் என்பவர் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ள நிலையில்  தலைமை செயலாளரின்  மகன் தொடர்பான மகன்  தொடர்புடைய நிறுவனம்  முறைகேடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்ற பரிந்துரையை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் மற்றும் கோட்ட ஆணையர் அஸ்வின் குமார் ஆகிய இருவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து இருவரும் மீதும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரையை துணை நிலை ஆளுநர் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments