Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் உடலில் இருந்து பெனியின்ட் தின்னரை நீக்க கொழுப்பை பயன்படுத்திய மருத்துவர்கள்

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (17:36 IST)
டெல்லியில் 14 மாத குழந்தையின் உடலில் இருந்து பெயின்ட் தின்னரை நீக்க மருத்துவர்கள் கொழுப்பை பயன்படுத்தி உள்ளனர்.

 
ஆக்ராவைச் சேர்ந்த 14 மாத குழந்தை பெயின்ட் தின்னரை குடித்ததால் குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் முயற்சி செய்தும் தின்னரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் குழந்தையை டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 
 
கங்காராம் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தையின் உடம்பில் ஊசி மூலம் கொழுப்பை செலுத்தி தின்னரை வெளியே எடுத்துள்ளனர். இதுகுறித்து கங்காராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் திரன் குப்தா கூறியதாவது:-
 
கொழுப்பால் கரைய கூடிய ஒன்றுதான் பெயின்ட் தின்னர். உடம்பில் கொழுப்பை செலுத்தும்போது குடலில் அடைத்து இருக்கும் தின்னரை கரைத்து விடும். சிறுநீர் மற்றும் ஜீரணத்தின் மூலம் சரி செய்யப்பட்டு விடும். இந்த முறையில்தான் குழந்தையை காப்பாற்றினோம். இது ஒரு புதிய முறை வைத்தியம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments