Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வராக பட்னாவிஸ், துணை முதல்வராக ஷிண்டே பதவியேற்பு.. முடிவுக்கு வந்த இழுபறி.!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (18:16 IST)
மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் துணை முதல்வராக ஷிண்டே ஆகியோர் பதவியேற்றதை அடுத்து, கடந்த சில நாட்களாக இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும், இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியை தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அந்தக் கட்சிக்கே முதல்-மந்திரி வேட்பாளர் என்று கூறப்பட்டது. ஆனால் ஷிண்டே அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து, மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், சற்றுமுன் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுக்கு முதல்வர் பதவிக்கான பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் ஷிண்டே துணை முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments