Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரத்தை அடுத்து மேலும் ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர் கைது

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (22:33 IST)
காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
கர்நாடகா மாநிலத்தில் வலிமையான காங்கிரஸ் தலைவராக திகழ்ந்து வரும் கே சிவக்குமார் என்பவரை   அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 4 நாள்கள் விசாரணைக்கு பின்னர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
 
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்த டிகே சிவக்குமார். மீது சமீபத்தில் பண மோசடி குறித்த புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினர்களிடம் ஆஜரானார்.
 
 
கடந்த நான்கு நாள்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் விசாரணையின் முடிவில் டிகே சிவக்குமாரை இன்று இரவு அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கைதுக்கு பின் டிகே சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். ப சிதம்பரத்தை அடுத்து மேலும் ஒரு காங்கிரஸ் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments