Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் இல்லத்தின் மேல் திடிரென பறந்த டிரோன்: டெல்லியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:52 IST)
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென பிரதமர் மோடி இல்லத்தின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 5.30 அளவில் மர்மமான ட்ரோன் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
விமானங்கள் கூட பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் அனுமதி இன்றி ட்ரோன் பறந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் 
இதனை அடுத்து ட்ரோன் பறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார்  தெரிவித்துள்ளனர். தற்போது வரை அந்த ட்ரோனை இயக்கியது யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது அயல்நாட்டு சதியா என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
அதிகாலையில் திடீரென பிரதமர் மோடியின் இல்லத்தின் மேல் டோன் பறந்ததால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments