Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் இல்லை - தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (13:36 IST)
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 
கர்நாடக  மாநிலத்தில் வருகிற மே 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், கோலார் தங்க வயல், ஹனூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்காக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. 
 
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி எனவும், கர்நாடக மாநிலத்தில் அக்கட்சி அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் காரணம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments