Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடியின் கடிதம்: உடனடியாக நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (13:53 IST)
வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடியின் கடிதம் வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதை அடுத்து அதை உடனடியாக நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடி அனுப்புவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம் ஒரு செய்தி அனுப்பப்பட்டு வருகிறது என்பதும் அதில் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா செய்த சாதனைகளை குறித்து விளக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் பிரதமர் வாக்காளர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து விசாரணை செய்த தேர்தல் ஆணையம் அனைவருக்கும் வாட்ஸ் அப் மூலம் பிரதமர் மோடியின் கடிதம் அனுப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இந்த வாட்ஸ் அப் செய்தி அனுப்புவது  உடனடியாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments