Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென எழுந்த புகை.. பயணிகள் நிலை என்ன?

Mahendran
திங்கள், 16 ஜூன் 2025 (11:04 IST)
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில், ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென புகை எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த பிறகு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, அதில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட விசாரணையில், விமானம் தரையிறங்கியபோது இடதுபுற சக்கரத்தில் புகை எழுந்ததாக தெரியவந்துள்ளது. 
 
சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் இருந்து ஹஜ் பயணிகள் பயணம் செய்த இந்த விமானம், இன்று காலை லக்னோ விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சக்கரத்தில் புகை ஏற்பட்டதாகவும், இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த போதும், விமானி மிகவும் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி, அனைத்து பயணிகளையும் பாதுகாத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே, அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்ட நிலையில், அடுத்தடுத்து விமான கோளாறுகள் ஏற்பட்டு வருவது, விமானத்தில் பயணம் செய்யவே பொதுமக்கள் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரம் ஏற வேண்டாம், என்னை பின் தொடர வேண்டாம்.. தவெக தொண்டர்களுக்கு அறிவுரைகள் கூறிய விஜய்..

பாகிஸ்தானுக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்: காங்கிரஸ் பிரபலம்..!

2 பானிபூரி குறைவாக கொடுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்.. பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

மரத்தில் தூக்கில் தொங்கிய காதலன்.. கீழே சடலமாக காதலி.. கொலையா? தற்கொலையா?

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments