Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ.பி.எஸ்-கே இரட்டை இலை சின்னம்..! ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு..!!

Senthil Velan
புதன், 27 மார்ச் 2024 (12:43 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உள்ள தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
 
இதனிடையே அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த  நீதிமன்றம் தடை விதித்தது. அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும்  எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
 
இந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி மனு கொடுத்தார். 
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. 

ALSO READ: அண்ணாமலை வேட்பு மனு தாக்கல்..! பாஜக - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..! கோவையில் பரபரப்பு..!!
 
இபிஎஸ்-க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments