Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்..! 10 நாட்களில் 400 பேர் பாதிப்பு..!!

Senthil Velan
புதன், 8 மே 2024 (15:25 IST)
டெல்லி காசியாபாத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
டெல்லி காசியாபாத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். கடும் வயிற்று வலி, வாந்தி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 15 தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். தண்ணீர் பிரச்னை காரணமாக இந்த தொற்று பரவுகிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ: இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா.? செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கேள்வி..!

கடந்த 3 நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காலநிலை மாற்றம் மற்றும் வெப்பம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுவதாக தாங்கள் உணர்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments